செவ்வாய், 30 ஜூன், 2009

சங்கம் காலம் - அகம்



" முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே ".


பாடியவர்: கூடாலுர் கிழார்






பொருள்:-

தயிரை பிசைந்த, மலரைவிட மெல்லியவிரல்களைத் தான்அணிந்திருக்கும் உடையிலேயே துடைத்துக்கொண்டும், அழகான கண்களில்அறுப்பு புகை எல்லாம் புகுந்தும் கண்களை கசக்கிக் கொண்டே தான்கிண்டிய புளிக்குழம்பை, ரசித்து சாப்பிடும் கணவன்நன்றாக இருக்கிறதுஎன்றவுடன் அடுப்படியில்தான் பட்ட சிரமம் எல்லாம்மறந்து மலர்ந்தது மகிழ்ச்சியடைகிறது அவள் முகம்..