மெளனமாய்
சிரிந்து
அழுது
சொல்ல முடியாத
மெளனத்தின்
வலிகள்
எத்தனையோ!
உணர்ந்து சொன்னாய்
துடைக்கும் விரலாய்
இல்லாமல்
குத்தும் விரலாய்
ஆனேனோ!
சொல்லெ துடிக்கும்
இதயத்திற்கு
உயிர் இருந்தது
கேட்ட
இதயம்
உயிர் அற்றதோ!
வருடங்கள்
கழித்தன
பேச்சு
மட்டுமா
ஆம்
உனக்கு!
பால்யத்தில்
பருவத்தில்
கல்லூரியில்
கிடைக்காத
அனைத்தும்
கிடைத்தது
உன்னில்
உனக்குத் தெரியாமல்!
எத்தனையோ
நண்பர்கள்
இருவருக்கும்
உனக்கு
புள்ளியாய்
எனக்கு
உலகமாய்!
நெஞ்சு நிரம்பி
வழிந்தது
ஒன்றும் இல்லாமலெ
ஒரு வேளை
இருந்தால்
அதிர்ச்சியில்
இறந்து தான்
போயிருக்கும்!
கடக்கும் நொடிகளும்
கடக்கும் நினைவுகளும்
நெஞ்சை விட்டு
கடப்பதில்லை!
எத்தனையோ
நினைவுகள்
வரிசையாக்கினால்
வாழ்நாள்
இத்து தான்
போகும்
உன் நினைவுகளும்
அப்படியே!


2 கருத்துகள்:
இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
"எத்தனையோ
நண்பர்கள்
இருவருக்கும்
உனக்கு
புள்ளியாய் (நான்)
நீ எனக்கு
உலகமாய்!"
............. அற்புதம்
தயவு செய்து எந்த கவிதையையும் அனுப்புவதற்கு முன் இரண்டு மூன்றுதடவை பிழைதிருத்தம் சரிபார்க்கவும்..... தங்கள் நலம் விரும்பி
கருத்துரையிடுக